'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக கவுரவ ஆலோசகர் டி.ராஜேந்திரன், தலைவர் உஷா ராஜேந்தர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் வி.பி.எப் கட்டணம். இக்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், இதுவரை அந்த கோரிக்கை நிறைவேறவில்லை.
அயல்நாடுகளில் பெரும்பாலும் வி.பி.எப் கட்டணம் கிடையாது. ஆனால் இங்கு தயாரிப்பாளர்கள் மீது ஒரு சுமையாக செலுத்தப்பட்டு இந்த கட்டணத்தால் சிறுபட தயாரிப்பாளர்கள் முதல் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் வரை அனைவருமே பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே, வி.பி.எப் கட்டணத்தை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும். அதே போல், எல்.பி.டி (லோக்கல் பாடி டேக்ஸ்) வரியையும் ரத்து செய்யவேண்டும் என்று அரசிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். இதனையும் வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
திரைத்துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உணர்வுள்ளவர்கள் அனைவரும் 'கவன ஈர்ப்பு' ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.