பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படம், பாண்டிராஜின் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படம் பிப்-4ஆம் தேதி தென்னிந்திய மொழிகளுடன் ஹிந்தியையும் சேர்த்து 5 மொழிகளில் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யாவின் படம் தியேட்டர்களில் முதன் முறையாக பான் இந்தியா ரிலீஸாக வெளியாவது இதுவே முதன்முறை.. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சூர்யாவின் படங்களுக்கென அதிக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். கன்னடத்தில் ஓரளவுக்கு ரசிகர்கள் இருந்தாலும் ஹிந்தியில் இதுவரை நேரடியாக சூர்யாவின் படங்கள் தியேட்டரில் ரிலீசானதில்லை.
அதேசமயம் சூர்யாவின் முந்திய இரண்டு படங்களான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்கள் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம் என்கிற பெருமையை ஜெய்பீம் பெற்றுள்ளது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் இந்தப்படத்தை பான் இந்தியா ரிலீஸாக 5 மொழிகளில் வெளியிடும் முடிவை எடுத்துள்ளார்கள் என்றே திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.
முதல் பாடல்
இதனிடையே இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை(டிச., 15) மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு ஒரு சிறு வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டி.இமான் இசையமைக்க, டைரக்டர் விக்னேஷ்சிவன் பாடலை எழுதியிருக்கிறார். இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், அனிருத் ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். அந்த வகையில் அந்த பாடலில் சூர்யா, டி.இமான், விக்னேஷ்சிவன், ஜி.வி.பிரகாஷ், அனிருத் என ஐந்து பிரபலங்கள் இணைந்துள்ளனர். வருகிற பிப்ரவரி 4-ந்தேதி ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது.