கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படம், பாண்டிராஜின் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படம் பிப்-4ஆம் தேதி தென்னிந்திய மொழிகளுடன் ஹிந்தியையும் சேர்த்து 5 மொழிகளில் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யாவின் படம் தியேட்டர்களில் முதன் முறையாக பான் இந்தியா ரிலீஸாக வெளியாவது இதுவே முதன்முறை.. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சூர்யாவின் படங்களுக்கென அதிக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். கன்னடத்தில் ஓரளவுக்கு ரசிகர்கள் இருந்தாலும் ஹிந்தியில் இதுவரை நேரடியாக சூர்யாவின் படங்கள் தியேட்டரில் ரிலீசானதில்லை.
அதேசமயம் சூர்யாவின் முந்திய இரண்டு படங்களான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்கள் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம் என்கிற பெருமையை ஜெய்பீம் பெற்றுள்ளது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் இந்தப்படத்தை பான் இந்தியா ரிலீஸாக 5 மொழிகளில் வெளியிடும் முடிவை எடுத்துள்ளார்கள் என்றே திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.
முதல் பாடல்
இதனிடையே இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை(டிச., 15) மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு ஒரு சிறு வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டி.இமான் இசையமைக்க, டைரக்டர் விக்னேஷ்சிவன் பாடலை எழுதியிருக்கிறார். இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், அனிருத் ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். அந்த வகையில் அந்த பாடலில் சூர்யா, டி.இமான், விக்னேஷ்சிவன், ஜி.வி.பிரகாஷ், அனிருத் என ஐந்து பிரபலங்கள் இணைந்துள்ளனர். வருகிற பிப்ரவரி 4-ந்தேதி ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது.