ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து நவம்பர் 25ந்தேதி திரைக்கு வந்துள்ள மாநாடு படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டி ருக்கும் நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் வெங்கட்பிரபு. அப்போது மாநாடு படத்தை வெற்றிப்படமாக்கியதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த வில்லன் வேடத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் ரவிதேஜாவிடமும் பேசினோம். அவர் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைத்தோம். தற்போது மாநாடு படத்தை பார்த்துள்ள ரவிதேஜா தெலுங்கில் இந்த படத்தை ரீ மேக் செய்தால் வில்லனாக நான் தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
மாநாடு படத்தின் இறுதியில் மீண்டும் சிம்புவிற்கு டைம் லூப் வருவது போல் வைத்துள்ளோம். அப்படி சிம்புவிற்கு வரும்போது எஸ்.ஜே.சூர்யாவிற்கான காட்சிகளும் மீண்டும் வரும் என்று தெரிவித்துள்ள வெங்கட்பிரபு கூடிய சீக்கிரமே மாநாடு 2விற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.