‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து நவம்பர் 25ந்தேதி திரைக்கு வந்துள்ள மாநாடு படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டி ருக்கும் நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் வெங்கட்பிரபு. அப்போது மாநாடு படத்தை வெற்றிப்படமாக்கியதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த வில்லன் வேடத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் ரவிதேஜாவிடமும் பேசினோம். அவர் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைத்தோம். தற்போது மாநாடு படத்தை பார்த்துள்ள ரவிதேஜா தெலுங்கில் இந்த படத்தை ரீ மேக் செய்தால் வில்லனாக நான் தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
மாநாடு படத்தின் இறுதியில் மீண்டும் சிம்புவிற்கு டைம் லூப் வருவது போல் வைத்துள்ளோம். அப்படி சிம்புவிற்கு வரும்போது எஸ்.ஜே.சூர்யாவிற்கான காட்சிகளும் மீண்டும் வரும் என்று தெரிவித்துள்ள வெங்கட்பிரபு கூடிய சீக்கிரமே மாநாடு 2விற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.