ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தென் இந்திய மொழிகளிலேயே பிரபலமாகி விட்டார். தெலுங்கிலும் இந்த படம் ஹிட் அடித்தது. கடந்த சில மாதங்களாக சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. தெலுங்கில் நவீன் பொலிசிட்டி நடிப்பில் வெளியான ஜதிரத்னலு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை அனுதீப் என்பவர் இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் மூலம் அனுதீப் தெலுங்கு வட்டாரத்தில் பிரபலமாகியுள்ளார்.
தற்போது இந்தப் படத்தில் நடிகை ரித்து வர்மா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ரித்து வர்மா கடைசியாக தமிழில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அடுத்து தீனி என்ற படத்தில் அசோக் செலவனுடன் நடித்தார். இந்நிலையில் அவர் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்க இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.