தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ள ராகினி திவேதி இப்போது படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கி உள்ளார். அவர் நடித்து இடையில் நிறுத்தப்பட்ட காந்திகிரி படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளது. இது தவிர சாரி: கர்மா ரிட்டன் என்ற படத்தில் நடிக்கிறார். இது பெண்ணை கதை களமாக கொண்ட படம். முதன் முறையாக இந்த படத்தில் ராகினி ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். க்ரைம் த்ரில்லர் கதை.
இது தவிர பிரம்மா இயக்கும் ராணா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்த பாடல் காட்சி பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. பெங்களூரை அடுத்த ஹேமாகள்ளி கிராமத்தில் பிரமாண்ட கிராம திருவிழாவை நடத்தி இந்த பாடலை படமாக்க திட்டமிட்டிருந்தனர். புனித் ராஜ்குமார் மறைவால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. அடுத்த வாரம் படப்பிடிப்புகள் நடக்கிறது.