டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பெரிய அளவில் குறைந்து விட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் சில பிரபலங்கள் அவ்வப்போது கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்துகொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, தான் கடந்த மாதம் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்ததாக தற்போது கூறியுள்ளார்.
கடந்த மாதம் டைகர்-3 படப்பிடிப்பிற்காக ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவுக்கு சென்றிருந்தபோது அங்கே கொரோனா பாசிடிவ் என்பது உறுதியாகி, நான்கு நாட்கள் காய்ச்சலால் அவதிப்பட்டேன் என்று கூறியுள்ளார் இம்ரான் ஹாஸ்மி. இந்தியாவிலிருந்து விமானம் ஏறும் முன்போ, அல்லது விமானத்தில் பயணித்த சமயத்திலோ தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி ஒரு மாதம் கழித்து அவர் இதை கூறுவதற்கு காரணம் இருக்கிறது. அவர் தற்போது நடித்துள்ள டைபக் என்கிற ஹாரர் படம் வரும் அக்-29ல் வெளியாக இருக்கிறது. அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் இம்ரான் ஹாஸ்மி, தனக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டதையும் ஒரு பப்ளிசிட்டிக்காக பயன்படுத்தி வருகிறார் என்றே பாலிவுட் வட்டாரம் கூறுகிறது.