மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
சீரியல்களில் நடித்து வந்தவர் தான் பஞ்சாபி நடிகை பாயல் ராஜ்புத். அதன்பின் பஞ்சாபி படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக அதை பார்த்து தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 படத்தில் கதாநாயகி வாய்ப்பு தேடி வந்தது. அந்தப்படம் ஹிட்டாகவே, தெலுங்கு ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டார் பாயல் ராஜ்புத். இந்த நிலையில் தற்போது அவர் மீது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் ஆந்திர மாநிலம் எடாப்பள்ளி நகரத்திலுள்ள ஒரு நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் பாயல் ராஜ்புத். அப்போது அவர் முக கவசம் அணிந்திருக்கவில்லை. சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. அவரைக் காண்பதற்காக அங்கே மிகப் பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் முண்டியடித்ததால் கொரோனா விதிமுறைகள் காற்றில் பறந்தன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் அளித்ததன் பேரில் தற்போது கடை நிர்வாகத்தின் மீதும் பாயல் ராஜ்புத் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.