இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

சீரியல்களில் நடித்து வந்தவர் தான் பஞ்சாபி நடிகை பாயல் ராஜ்புத். அதன்பின் பஞ்சாபி படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக அதை பார்த்து தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 படத்தில் கதாநாயகி வாய்ப்பு தேடி வந்தது. அந்தப்படம் ஹிட்டாகவே, தெலுங்கு ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டார் பாயல் ராஜ்புத். இந்த நிலையில் தற்போது அவர் மீது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் ஆந்திர மாநிலம் எடாப்பள்ளி நகரத்திலுள்ள ஒரு நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் பாயல் ராஜ்புத். அப்போது அவர் முக கவசம் அணிந்திருக்கவில்லை. சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. அவரைக் காண்பதற்காக அங்கே மிகப் பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் முண்டியடித்ததால் கொரோனா விதிமுறைகள் காற்றில் பறந்தன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் அளித்ததன் பேரில் தற்போது கடை நிர்வாகத்தின் மீதும் பாயல் ராஜ்புத் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.