
கொரோனா பகுதியில் நுழைந்த மின்னல் முரளி : தடுத்து நிறுத்திய மக்கள்
இந்தநிலையில் தற்போது கேரளாவின் தொடுபுழா அருகில் உள்ள குமாரமங்கலம் பகுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை துவங்கி நடத்த ஆரம்பித்தனர். ஆனால் கொரோனா தாக்கம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள பகுதி என்பதால், அந்தப்பகுதி மக்கள் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முதலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்த போலீஸார் பின்னர் அதை திரும்ப பெற்றனர். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் கொரோனா முதல் அலை துவங்கியபோதே பாதியில் நின்றது. அந்த சமயத்தில் தான் இந்தப்படத்திற்காக போடப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள சர்ச் செட்டை சில மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!