திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கேரளாவில் கடந்த ஜூலை-17 முதல் சில நிபந்தனைகளுடன் படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. ஆனாலும் சில பெரிய படங்கள் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு கிளம்பிச் சென்றுவிட்டன. அதேசமயம் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் டொவினோ தாமஸ் தற்போது சூப்பர் ஹீரோ கதையாக உருவாகி வரும் மின்னல் முரளி என்கிற படத்தில் நடித்து வருகிறார்..
இந்தநிலையில் தற்போது கேரளாவின் தொடுபுழா அருகில் உள்ள குமாரமங்கலம் பகுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை துவங்கி நடத்த ஆரம்பித்தனர். ஆனால் கொரோனா தாக்கம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள பகுதி என்பதால், அந்தப்பகுதி மக்கள் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முதலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்த போலீஸார் பின்னர் அதை திரும்ப பெற்றனர். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் கொரோனா முதல் அலை துவங்கியபோதே பாதியில் நின்றது. அந்த சமயத்தில் தான் இந்தப்படத்திற்காக போடப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள சர்ச் செட்டை சில மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.