ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை சர்வதேச திரைப்பட விழா தற்போது நடந்து வருகிறது. இதேபோன்று ஆண்டு தோறும் பெங்களூருவிலும் சர்வதேச திரைப்பட விழா நடக்கும். அதன்படி 13வது பெங்களூரு சர்வதே திரைப்பட விழா கடந்த மாதமே நடந்திருக்க வேண்டியது. கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு வருகிற மார்ச் மாதம் 24ம் தேதி தொடங்கி 31ந் தேதி வரை நடக்கிறது.
இதில் சுமார் 40 நாடுகளை சேர்ந்த 90 படங்கள் வரை திரையிடப்படுகிறது. இதுதவிர இந்த ஆண்டு சத்யஜித் ரேவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் சிறப்பு பிரிவில் திரையிடப்படுகிறது. கர்நாடக சலனசித்ர அகாடமி சார்பில் திரைப்படங்கள் குறித்த கருத்தரங்கம் நடக்கிறது. 11 மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் இந்த பட விழாவுக்காக பயன்படுத்தப்பட இருக்கிறது.
இதற்கான லோகோ அறிமுக விழா நடந்தது. கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா சர்வதேச பட விழாவுக்கான லோகோவை வெளியிட்டார். இதில் நடிகர், நடிகைகள், கர்நாடகா பிலிம் சேம்பர், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.