'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாள திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக நடித்து வருபவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் பிடிபட்ட போதை பொருள் கடத்தும் கும்பல், நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு தாங்கள் தொடர்ந்து போதைப்பொருள் சப்ளை செய்வதாக வாக்குமூலத்தில் கூறியிருந்தனர்.
அதேபோல ஷைன் டான் சாக்கோவுடன் ஒரு படத்தில் நடித்த சக நடிகையான வின்சி அலோசியஸ் என்பவர், படப்பிடிப்பிலேயே ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்ள முயற்சித்தார் என குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி சாக்கோ கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை இவரை கடந்த சில நாட்களாக விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில், தான் போதைப் பொருள் பயன்படுத்துவதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார் ஷைன் டாம் சாக்கோ. அதுமட்டுமல்ல, இந்த பாதிப்பில் இருந்து, தான் வெளியே வர வேண்டும் என விரும்பும் சாக்கோ, இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதை மீட்பு மையத்திற்கு தான் செல்ல விரும்புவதாகவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் விரைவில் போதை மீட்பு மையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார் என்று காவல்துறையில் இருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.