இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

மலையாள திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளில் மம்முட்டி நடித்த ஒரு சிபிஐ டைரி குறிப்பு படத்தின் ஐந்து பாகங்கள் இதுவரை வெளியாகி உள்ளன. இந்திய சினிமாவிலேயே இப்படி ஐந்து பாகங்கள் வெளியானது இந்த படத்திற்கு மட்டும் தான். இந்த ஐந்து பாகங்களின் கதையையும் எழுதியவர் சீனியர் கதாசிரியரான எஸ்.என் சுவாமி என்பவர் தான். இவரது வயது 72. தனது 40 வருட திரையுலக பயணத்தில் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் கதை எழுதியுள்ள எஸ்.என் சுவாமி தற்போது முதல்முறையாக டைரக்ஷனில் அடியெடுத்து வைத்துள்ளார். மலையாள திரையுலகிலேயே இப்படி அதிக வயதில் இயக்குனராக அறிமுகமாகும் சாதனைக்கு சொந்தக்காரராகவும் மாறியுள்ளார் எஸ்.என் சுவாமி.
அதேசமயம் இவரது பெரும்பாலான படங்கள் ஆக்சன் மற்றும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படங்களாகவே உருவாகியுள்ளன. ஆனால் இவர் முதன்முறையாக இயக்கவுள்ள படம் ஒரு ரொமாண்டிக் காதல் கதையாக உருவாக இருக்கிறதாம். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் தயன் சீனிவாசன் நடிக்கிறார். இவர் நடிகரும் இயக்குனருமான வினித் சீனிவாசனின் தம்பி என்பதுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா நடிப்பில் வெளியான லவ் ஆக்சன் ட்ராமா படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




