இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
மலையாள திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளில் மம்முட்டி நடித்த ஒரு சிபிஐ டைரி குறிப்பு படத்தின் ஐந்து பாகங்கள் இதுவரை வெளியாகி உள்ளன. இந்திய சினிமாவிலேயே இப்படி ஐந்து பாகங்கள் வெளியானது இந்த படத்திற்கு மட்டும் தான். இந்த ஐந்து பாகங்களின் கதையையும் எழுதியவர் சீனியர் கதாசிரியரான எஸ்.என் சுவாமி என்பவர் தான். இவரது வயது 72. தனது 40 வருட திரையுலக பயணத்தில் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் கதை எழுதியுள்ள எஸ்.என் சுவாமி தற்போது முதல்முறையாக டைரக்ஷனில் அடியெடுத்து வைத்துள்ளார். மலையாள திரையுலகிலேயே இப்படி அதிக வயதில் இயக்குனராக அறிமுகமாகும் சாதனைக்கு சொந்தக்காரராகவும் மாறியுள்ளார் எஸ்.என் சுவாமி.
அதேசமயம் இவரது பெரும்பாலான படங்கள் ஆக்சன் மற்றும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படங்களாகவே உருவாகியுள்ளன. ஆனால் இவர் முதன்முறையாக இயக்கவுள்ள படம் ஒரு ரொமாண்டிக் காதல் கதையாக உருவாக இருக்கிறதாம். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் தயன் சீனிவாசன் நடிக்கிறார். இவர் நடிகரும் இயக்குனருமான வினித் சீனிவாசனின் தம்பி என்பதுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா நடிப்பில் வெளியான லவ் ஆக்சன் ட்ராமா படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.