டிரைலரிலும் சிவகார்த்திகேயனுடன் மோதும் கவின்! | மூன்றாவது முறையாக இணைந்த நானி - அனிருத் கூட்டணி | நாளை அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | 'புஷ்பா 2' படப்பிடிப்பு நிறைவு | காதல் குறித்த கேள்வி- கடுப்பான சுனைனா! | சூர்யாவுக்கு ஜோடியாகும் காஷ்மிரா பர்தேசி? | 'லெவன்' படத்திற்காக டி.இமான் இசையில் ஆங்கில பாடல் பாடிய ஸ்ருதிஹாசன்! | ஸ்டார் சேனல்கள் கட்டணம் உயர்வா? டிஸ்னி ஸ்டார் மறுப்பு | அஜித்துடன் மோதத் தயாராகும் விக்ரம்! | ரஜினியும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்களா? சுஹாசினி சொன்ன பதில் |
மலையாள திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளில் மம்முட்டி நடித்த ஒரு சிபிஐ டைரி குறிப்பு படத்தின் ஐந்து பாகங்கள் இதுவரை வெளியாகி உள்ளன. இந்திய சினிமாவிலேயே இப்படி ஐந்து பாகங்கள் வெளியானது இந்த படத்திற்கு மட்டும் தான். இந்த ஐந்து பாகங்களின் கதையையும் எழுதியவர் சீனியர் கதாசிரியரான எஸ்.என் சுவாமி என்பவர் தான். இவரது வயது 72. தனது 40 வருட திரையுலக பயணத்தில் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் கதை எழுதியுள்ள எஸ்.என் சுவாமி தற்போது முதல்முறையாக டைரக்ஷனில் அடியெடுத்து வைத்துள்ளார். மலையாள திரையுலகிலேயே இப்படி அதிக வயதில் இயக்குனராக அறிமுகமாகும் சாதனைக்கு சொந்தக்காரராகவும் மாறியுள்ளார் எஸ்.என் சுவாமி.
அதேசமயம் இவரது பெரும்பாலான படங்கள் ஆக்சன் மற்றும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படங்களாகவே உருவாகியுள்ளன. ஆனால் இவர் முதன்முறையாக இயக்கவுள்ள படம் ஒரு ரொமாண்டிக் காதல் கதையாக உருவாக இருக்கிறதாம். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் தயன் சீனிவாசன் நடிக்கிறார். இவர் நடிகரும் இயக்குனருமான வினித் சீனிவாசனின் தம்பி என்பதுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா நடிப்பில் வெளியான லவ் ஆக்சன் ட்ராமா படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.