
பொய் சொன்ன மீனா ; வருத்தப்பட்ட கலா மாஸ்டர் : அப்புறம் நிகழ்ந்த ‛சர்ப்ரைஸ்
செப் 04, 2022
Advertisement
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. தற்போதும் படங்களில பிஸியாக நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன் இவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் காலமானார். மீள முடியாத இந்த துயர சம்பவத்திலிருந்து மீனா இப்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். வித்யாசாகர் மறைந்த சமயத்தில் இருந்து இப்போது வரை மீனாவிற்கு பக்கபலமாக இருந்து வருகிறார் நடன இயக்குனர் கலா.
இந்நிலையில் கலா மாஸ்டர் தனது 18வது திருமணநாளை கொண்டாடினார். இதற்கு வரும்படி மீனாவை அழைத்துள்ளார். ஆனால் மீனாவோ தான் ஊரில் இல்லை என கூறிவிட்டார். இதனால் மிகுந்த வருத்தம் அடைந்த கலாவிற்கு சர்ப்ரைஸாக மீனா என்ட்ரி கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்நிலையில் கலா மாஸ்டர் தனது 18வது திருமணநாளை கொண்டாடினார். இதற்கு வரும்படி மீனாவை அழைத்துள்ளார். ஆனால் மீனாவோ தான் ஊரில் இல்லை என கூறிவிட்டார். இதனால் மிகுந்த வருத்தம் அடைந்த கலாவிற்கு சர்ப்ரைஸாக மீனா என்ட்ரி கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதுபற்றி கலா கூறுகையில், ‛‛மீனா ஊரில் இல்லை என்று என்னிடம் பொய் சொன்னார். எங்களுடைய இந்த சிறப்பு நாளில் அவர் என்னுடன் இல்லையே என வருத்தப்பட்டேன். ஆனால் திடீரென்று வந்து என்னை ஆச்சரியப்படுத்தினார். லவ் யூ மீனா"" என கூறியுள்ளார்.
அதோடு மீனாவை பார்த்த இன்ப அதிர்ச்சியில் கண்கலங்கிய போட்டோக்களையும், தனது திருமணநாள் கொண்டாட்ட போட்டோக்களையும் கலா பகிர்ந்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!