
அல்லு அர்ஜூனுக்கு கொரோனா
ஏப் 28, 2021
Advertisement
கொரோனாவின் இரண்டாவது அலைக்கு திரையுலகினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில், ‛‛எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. என் வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்தி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். தக்க தருணத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நான் நலமாக உள்ளேன், பயப்பட ஒன்றும் இல்லை என பதிவிட்டுள்ளார்.
அல்லு அர்ஜூன் தற்போது சுகுமார் இயக்கத்தில் ‛புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.
இதுகுறித்து டுவிட்டரில், ‛‛எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. என் வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்தி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். தக்க தருணத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நான் நலமாக உள்ளேன், பயப்பட ஒன்றும் இல்லை என பதிவிட்டுள்ளார்.
அல்லு அர்ஜூன் தற்போது சுகுமார் இயக்கத்தில் ‛புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!