Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

துங்கபத்ரா

துங்கபத்ரா,Thungabatra
  • துங்கபத்ரா
  • ஆதித் அருண் (தெலுங்கு)
  • டிம்பிள் (தெலுங்கு)
  • இயக்குனர்: ஸ்ரீனிவாச கிருஷ்ணா கோகினேனி
21 மார், 2015 - 15:01 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » துங்கபத்ரா

தினமலர் விமர்சனம்


சமீப காலமாகவே குறைந்த பட்ஜெட் படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைவதை நம்மால் காண முடிகிறது. வாராஹி சலன சித்ரா என்ற தயாரிப்பு நிறுவனம் பெரிய மற்றும் சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகின்றது. இந்நிலையில் அந்த நிறுவனம் தயாரித்த துங்கபத்ரா, இன்றைய சமூக அமைப்பிற்கு தேவையான ஒரு கருத்தை பதிவு செய்துள்ளது. நமது பல கிராமங்களில் அரசியல்வாதிகள் தங்களது சுய லாபத்திற்காக அப்பாவி தொண்டர்களை காவு கொடுப்பது தொன்று தொட்டு நடந்து வருகின்றது. இந்த கதை களத்தை பின்புலமாக வைத்து கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் இந்த துங்கபத்ரா.



விஜயவாடா அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு அரசியல் தலைவர்களும், அவர்களது தொண்டர்களும் மோதி கொள்கின்றனர். அதாவது ராமராஜூ (நம்ம சத்யராஜ் ) ஒரு அரசியல் பிரிவு. மற்றொரு பிரிவின் தலைவர் பைடிடள்ளி (கோட்டா ஸ்ரீனிவாச ராவ்). இந்நிலையில் ராமராஜுவின் மகளான கௌரி (டிம்பிள்) வருகிறார். அவருக்கும் அவருடைய தந்தையின் நம்பிக்கைக்கு பாத்திரமான அடியாளான ஸ்ரீனுக்கும் (ஆதித் அருண் ) இடையே காதல் மலர்கிறது. இந்த காதலை ராமராஜூ ஏற்று கொள்கிறாரா என்பது தான் கதை.


இந்த படத்தின் ஹீரோ ஆதித் ஏற்கனவே கதா என்ற படத்திலும், நாயகி டிம்பிள் ரோமன்ஸ் படத்திலும் தங்களது திறமையை வெளிகாட்டியவர்கள் என்பது நினைவிருக்கலாம். அவர்கள் இருவரும் இந்த படத்தின் கதாபாத்திரமாகவே மாறி விடுகின்றனர். சத்யராஜின் நடிப்பு மிரட்டவே செய்கிறது. அவரது நடை, உடை, பாவனை போன்றவைகள் ஒரு நிஜ அரசியல்வாதியை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. கோட்டா ஸ்ரீனிவாச ராவ்வும் தனக்கே உரிய பாணியில் அசத்தி உள்ளார். சிவ கிருஷ்ணா , பணக்கார தொழில் அதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறும் சப்தகிரி மற்றும் சத்யராஜின் மனைவியாக வரும் பவித்ரா ஆகியோர் தங்களது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளனர். ராகுல் ஸ்ரீவத்சவாவின் ஒளிப்பதிவு நன்றாகவே கை கொடுத்து இருக்கின்றது. சீரியசான படம் என்பதால் ஹரி கௌராவின் மென்மையான இசை பல இடங்களில் படத்திற்கு உயிரோட்டத்தை கொடுக்க வில்லை.

இந்த படத்தின் இயக்குனரான ஸ்ரீனிவாச கிருஷ்ணா கோகினேனிக்கு முதல் படத்திலேயே மெசேஜ் சொல்ல நிறைய துணிச்சல் இருந்திருக்க வேண்டும் என்றே சொல்ல வேண்டும். அவர் சொல்ல வந்ததை சரியாகவே சொல்லி இருக்கிறார்.

இந்த படம் கமர்சியலாக எடுக்கப்பட்டது அல்ல. இன்றைய பல கிராமங்களின் உண்மை நிலையை அப்படியே வெளிக்காட்டும் படமாக அமைந்துள்ளது.


மொத்தத்தில் துங்கபத்ரா குறைந்த செலவில் ஒரு அரசியல் சதுரங்க வேட்டை ஆகும்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in