பல இரவுகள் தூங்காமல் இருந்தேன்....'டிரோல்கள்' குறித்து விஜய் தேவரகொண்டா | 'பகவந்த் கேசரி' மீது விஜய்க்கு ஒரு நம்பிக்கை: இயக்குனர் அனில் ரவிப்புடி | ஆளுமை உரிமை வழக்கு தொடர்ந்துள்ள கமல்ஹாசன் | ஹிந்தியில் ஓப்பனிங்கிலேயே சரிவடைந்த பிரபாஸின் 'தி ராஜா சாப்' வசூல்! | பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் பிச்சைக்காரனாக விஜய் சேதுபதி! | 'பராசக்தி, தி ராஜா சாப்' படங்களின் வசூல் விவரம்! | 50 கோடிக்கு விற்பனையான டிமான்டி காலனி- 3 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ்! | 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'டாக்சிக் - ராயா' வீடியோ | சமமான சம்பளத்திற்காக குரல் கொடுக்கும் சுதா கொங்கரா! | வேதநாங் ரெய்னா, குஷி கபூரின் 2 வருட காதல் முறிந்ததா? |

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்முறையாக ஒடிடி தளத்தில் பிக்பாஸ் (ஹிந்தி) நிகழ்ச்சி துவங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட்-8ல் துவங்கிய இந்த ஒடிடி பிக்பாஸ் சீசன் செப்-18 அன்று நிறைவு பெற்றது. மொத்தம் 42 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 13 போட்டியாளர்களில் திவ்யா அகர்வால் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதே திவ்யா அகர்வால் தான், பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சக போட்டியாளர்கள் சிலருடன் மோதல் போக்கை கடைபிடித்தார் என்று கரண் ஜோஹரிடம் அவ்வப்போது குட்டுக்கள் வாங்கினார். இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் கரண் ஜோஹரை கோபப்படுத்தியதால் அவரது பட வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது என நினைக்கிறீர்களா என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த திவ்யா அகர்வால், “எனது வேலை சரியாக இருக்கும் பட்சத்தில் கரண் ஜோஹர் படத்தில் நடித்துதான் எனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை” என அதிரடியாக கூறினார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சட்டென்று, “நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் கரண் ஜோஹரின் படங்களாக தேடிப்பிடித்து பார்ப்பேன்” என அவருக்கு ஐஸ் வைக்கவும் செய்தார்.