டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லீ, அதையடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தனது புதிய படத்தை இயக்க மும்பையில் முகாமிட்டுள்ளார். இந்த படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் அட்லீ, தற்போது ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியிருக்கிறார்.
அதோடு இப்படத்தில் நயன்தாராவை ஷாரூக்கானுக்கு ஜோடியாக்கியுள்ள அட்லீ, இதுவரை தான் இயக்கிய படங்களை விட பிரமாண்டமாக இயக்குகிறாராம். குறிப்பாக, சண்டை காட்சிகளுக்கு சில ஹாலிவுட் கலைஞர்களை வரவழைக்கிறாராம். அதன்காரணமாக இப்படத்திற்கு ரூ. 200 கோடி பட்ஜெட் போட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.