கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

பாலிவுட் நடிகைகளில் பரபரப்புக்கு பெயர் போனவர் நடிகை கங்கனா ரணவத். தொடர்ந்து, எதை பற்றியாவது அதிரடியான கருத்துக்களை கூறி வரும் கங்கனா, பிஸியாக நடித்து வருபவர் என்பதால் அதிக அளவு வருமான வரி செலுத்துபவர்களின் பட்டியலில் இருக்கிறார்.. ஆனால் கடந்த வருடத்திற்காக தான் செலுத்த வேண்டிய வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “என்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை வரியாக செலுத்தும் அளவுக்கு மிக அதிக அளவில் வரி செலுத்துபவர்கள் பிரிவில் நான் இருந்தும், அதிக அளவு வரி செலுத்தும் நடிகையாக இருந்தும் கூட, வேலை இல்லாத காரணத்தால் கடந்த வருடத்தில் என்னுடைய வரித்தொகையில் பாதிக்கு மேல் செலுத்த முடியவில்லை. இப்படி நடப்பது என் வாழ்க்கையில் இதுதான் முதல் தடவை” என கூறியுள்ளார். மேலும் வரி பாக்கி கட்ட வேண்டியவர்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் மாற்றியமைத்திருப்பது குறித்து வரவேற்பும் தெரிவித்துள்ளார் கங்கனா.