பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய படம் 'தி கேரளா ஸ்டோரி'. கேரளாவில் இந்துப் பெண்களை ஏமாற்றி அரபு நாடுகளுக்கு கடத்திச் சென்று மதமாற்றம் செய்து, தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தியதாக அந்தப் படத்தில் காட்சிகள் இடம்பெற்றன. இந்தப் படத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தப் படத்தை இயக்கிய சுதிப்டோ சென் தற்போது 'சாரக்' என்ற படத்தை தயாரித்துள்ளார். இதை ஷீலாதித்ய மவுலிக் இயக்கியுள்ளார். இப்படம் இந்து வழிபாட்டில் உள்ள அமானுஷ்ய நடைமுறைகளை பற்றி எடுக்கப்பட்டுள்ளது. அதில் நரமாமிச விஷயங்களும் இடம் பெற்றுள்ளன. இந்தப் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது.
இதுபற்றி சுதிப்டோ சென் கூறும்போது, “என் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததற்கான காரணம் தெரியவில்லை. இது கற்பனையான படம் அல்ல. ஆவணப்படுத்தப்பட்ட விஷயங்களையே படமாக்கி இருக்கிறோம். சில வெட்டுக்களை, சில காட்சிகளை நீக்க தயாராக இருக்கிறேன். ஆனால் சான்றிதழ் தராததற்கான காரணம் தெரியவில்லை. உண்மை எப்போதும் கசப்பாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.