'29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் |

அர்ஜுன் ரெட்டி, இட்லி கடை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே. இவர் விலங்குகள் நல அமைப்பான பீட்டாவில் உறுப்பினராக இருக்கிறார். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற 'நாய்களை தத்தெடுங்கள், விலைக்கு வாங்காதீர்கள்' என்கிற பீடா அமைப்பின் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஷாலினி பாண்டே.
அப்போது பேசிய அவர், “என்னுடைய செல்ல நாய்க்குட்டி பெயர் பிர். இதை நான் கடந்த 2021ல் ஹிமாச்சலில் இருந்து காப்பாற்றி, கொண்டுவந்து வளர்க்கிறேன். நாய்களுடன் பழகிய இந்த சில வருடங்களில் தான், நான் இன்னும் சிறந்த மனித நேயம் கொண்டவளாக மாறி இருக்கிறேன். உயர்ந்த ரக நாய்களை விலைக்கு வாங்குவதற்கு பதிலாக தெருவில் இருக்கும் நாய்களை தத்தெடுத்து வளருங்கள்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.