ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் அவரது மகளாக நடித்து அறிமுகமான சாரா அர்ஜுன், அதன்பிறகு சைவம், சில்லு கருப்பட்டி, பொன்னியின் செல்வன் என பல படங்களில் நடித்தார். சமீபத்தில் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் சாரா அர்ஜுன். துரந்தர் படத்தின் வெற்றி விழா மும்பையில் நடைபெற்றபோது, அந்த மேடையில் சாரா அர்ஜுனும் , நடிகர் ராகேஷ் பேடியும் வணக்கம் தெரிவித்தபடி கட்டிப்பிடித்துக் கொண் டார்கள்.
அதுகுறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து, சாரா அர்ஜுனிடம் ராகேஷ் பேடி தவறாக நடந்து கொண்டதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நேரத்தில் அது குறித்து நடிகர் ராகேஷ் பேடி ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறுகையில், துரந்தர் படத்தில் சாரா அர்ஜுனின் தந்தையாக நடித்துள்ளேன். அந்த படப்பிடிப்பு தளத்தில் எப்போது என்னை சந்தித்தாலும் இதுபோன்று ஹக் செய்துதான் அவர் வணக்கம் சொல்வார். அதேபோன்றுதான் அப்படத்தின் வெற்றி விழா மேடையிலும் செய்தார். எங்களுக்கிடையே இருப்பது அப்பா - மகள் உறவு தான். அதனால் இதை ரசிகர்கள் தவறான கோணத்தில் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.