ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. தெலுங்கில் 'கல்கி 2898 ஏடி' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ள 'ஸ்பிரிட்' படத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாகவும், இல்லை, இல்லை நீக்கப்பட்டார் என்றும் செய்திகள் வந்தன. அதற்கடுத்து 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்கவில்லை என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்கள்.
தீபிகா, ரன்வீர் சிங் தம்பதியினருக்கு ஒரு வயதியில் பெண் குழந்தை உள்ளது. குழந்தையையும், குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக 8 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்க்க முடியாது என அவர் கறாராக சொல்லிவிட்டார், அதனால்தான் அவரைப் படத்திலிருந்து நீக்கினார்கள் என்ற ஒரு பரபரப்பு எழுந்தது.
இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து தீபிகா, “100 கோடி அல்லது ரூ. 500-600 கோடி படங்கள் என்பது இனிமேல் யோசிக்கத் தேவையில்லை. சில சமயங்களில் அதிக பணம் கொடுத்து அது போதும் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது போதாது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை போதும். ஆரோக்கியமாக இருக்கும் போது மட்டுமே உங்கள் சிறந்ததை கொடுக்க முடியும்,” என்று கூறியுள்ளார்.