சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் | பிப்ரவரி 13 ரிலீஸ் படங்கள் : இன்றைய நிலவரம் என்ன ? | ஒரு மாதம் விடுமுறை எடுக்கப் போகும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக்: உதவி இயக்குனராக பணியாற்றிய ரஜினிகாந்த் | பிளாஷ்பேக் : அதிக படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியவர் |

ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் சிக்கி உள்ளனர். பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதின் ஒரு பகுதியாக ஆன்லைன் சூதாட்ட செயலிகளை (ஆப்) அரசு தடை செய்தது.
இந்த செயலிகளை விளம்பரப்படுத்திய நடிகர், நடிகையும் விசாரித்து வருகிறார்கள். சூதாட்ட பணத்தில் அவர்கள் சம்பளம் பெற்றிருந்தால் அதுவும் குற்றமாகும் என்கிற அடிப்படையில் அவர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறார்கள்.
அந்த வகையில் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஊர்வசி ரத்தேலா, மேற்கு வங்க நடிகை மிமி சக்ரவர்த்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டில்லியில் உள்ள அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் இன்று (செப்.15) விசாரணைக்கு ஆஜராவார்கள் என்று தெரிகிறது.
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரத்தேலா தமிழில் சரவணன் நடித்த 'லெஜண்ட்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.