‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்து வரும் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன. இதனால் எந்த மாதிரியான கதைகளில் நடிப்பது, எந்த மாதிரியான கேரக்டர்களில் நடிப்பது என்று அவருக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் நடித்துள்ள 'ஹவுஸ்புல் 5' வெளிவந்துள்ளது. இதனால் படம் குறித்து ரசிகர்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக படம் வெளியான தியேட்டர்களுக்கு சென்று முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு மைக்கை பிடித்து படம் பார்த்து திரும்பும் ரசிகர்களிடம் ஒரு யு-டியூபரை போல படத்தை பற்றிய அபிப்ராயத்தை கேட்டுள்ளார்.
இதில் அக்ஷய் குமார் நல்ல நடிகர் ஆனால் கதை தேர்வில் ரொம்ப வீக், ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிக்கிறார், ஆக்ஷன் படங்களை தவிர்த்து அழுத்தமான கதையம்சமுள்ள படங்களில் அவர் நடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருந்திருக்கிறது.