பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

இந்தியாவின் கலைஞர்களுக்கான முதல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். 'குங்குனாலோ' என பெயரிடப்பட்டுள்ள இச்செயலி, டலாசிரியர்கள் ஜாவேத் அக்தர், சமீர் அஞ்சான்,பாடகர்களான சங்கர் மகாதேவன், ஹரிஹரன், சோனு நிகம், பிரசூன் ஜோஷி, சலீம் மெர்ச்சன்ட், அருணா சாய்ராம், ஆனந்த் - மிலிந்த், மனன் ஷா, ராஜு சிங் மற்றும் இசைத்துறையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பிரபலங்களின் முன்னிலையில் துவங்கப்பட்டுள்ளது.
இசைத்துறையை சேர்ந்த கலைஞர்களுக்காவே உருவாக்கப்பட்ட இந்த செயலி வெறும் இசைக்கு மட்டும் இல்லாமல், கவிதை, கதைசொல்லல் மற்றும் பிற படைப்புகளை வெளிப்படுத்துதல் போன்றவைகளையும் உள்ளடக்கியுள்ளது. இச்செயலியின் நிறுவன உறுப்பினர்களாக ஜாவேத் அக்தர், சங்கர் மகாதேவன், சோனு நிகம், ஸ்ரேயா கோஷல், அரிஜித் சிங், பிரசூன் ஜோஷி, சமீர் அஞ்சான், விஷால் தட்லானி, அமித் திரிவேதி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
![]() |