யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் அனஸ்வரா ராஜன். தமிழில் திரிஷா நடித்த 'ராங்கி' நடித்த அவர், தற்போது உருவாகி வரும் '7ஜி ரெயின்போ காலனி' இரண்டாம் பாகத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். மலையாளத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் கடந்த ஜனவரி மாதம் வெளியான 'ரேகசித்திரம்' என்கிற படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அடுத்ததாக அவர் நடித்துள்ள 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் பேச்சுலர்' என்கிற படம் வெளியாக இருக்கிறது. ஆனால் இந்த படம் குறித்து புரமோஷன் செய்வதற்கு அனஸ்வரா ராஜன் மறுப்பதாக படத்தின் இயக்குனர் தீபு கருணாகரன் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மம்முட்டி, பிரித்விராஜ், திலீப், மஞ்சு வாரியர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கியவர் தீபு கருணாகரன். தற்போது இவர் தயாரித்து, இயக்கியுள்ள மிஸ்டர் அண்ட் மிஸஸ் பேச்சுலர் படத்தில் பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித் கதாநாயகனாக நடித்துள்ளார். படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல்களை 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு ஆடியோ கம்பெனிக்கு விற்றுள்ளார் தீபு கருணாகரன். கதாநாயகி பிரபலமானவர் என்பதால் அவரது இன்ஸ்டாவை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள் என்பதாலும் அவர் இந்த பாடல்களை புரமோட் செய்தால் நன்றாக இருக்கும் என தீபு கருணாகரன் விரும்பினார். ஆனால் பாடல்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட புரமோஷன் செய்ய மறுக்கிறாராம் அனஸ்வரா ராஜன்.
இதுகுறித்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது கூட இவரது அழைப்பை அவர் ஏற்கவில்லையாம். அவரது அம்மா மற்றும் மேனேஜர் மூலமாக தொடர்பு கொண்டபோது அவர்களிடமிருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை. இறுதியில் படத்தின் நாயகன் இந்திரஜித் அனஸ்வராவுக்கு போன் செய்து நீ செய்வது சரியில்லை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது தான் முறை என்று சொல்லியும் கூட அதையும் புறந்தள்ளி விட்டாராம் அனஸ்வரா ராஜன்.
“இத்தனைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து அனஸ்வரா ராஜன் நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடக்காமல் தேங்கி நின்றபோது கூட நிச்சயமாக இந்த படம் நல்லபடியாக முடியும், நான் உங்களுடன் இருப்பேன் சார் என்று எனக்கு அவ்வளவு நம்பிக்கையாக உற்சாகமளித்த அனஸ்வரா ராஜன் இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட இந்த படத்தின் பாடல்களை புரமோஷன் செய்ய மறுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நிச்சயமாக சங்கத்தில் இந்த பிரச்னையை முறையிட்டால் அவர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து தான் ஆக வேண்டும். அப்படி செல்லாமல் இதற்கு சுமூகமாக தீர்வு காண விரும்புகிறேன்” என்று தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் தீபு கருணாகரன்.