போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது? | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… | ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு | விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா | தென்னிந்தியப் படங்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன : பவன் கல்யாண் | 'ஹிட் 3' மீது கதை திருட்டு வழக்கு | விஜய் மல்லையாவை பார்த்து குடிப்பதை நிறுத்தினேன்: ராஜு முருகன் சொல்கிறார் | விஜயதேவரகொண்டா மீது வன்கொடுமை வழக்கு பதிவு | பிளாஷ்பேக்: கங்கை அமரனை நம்பி ஏமாந்த ஏவிஎம் |
நடிகை கத்ரீனா கைப் பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருகிறார் . இவர் தெலுங்கில் வெங்கடேஷ் டகுபதி உடன் 'மல்லிஸ்வரி' என்கிற படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது பாலிவுட்டில் உள்ள பெரும்பாலான முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார்.
இப்போது சமீபத்தில் கத்ரீனா கைப் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "தற்போது சினிமாவில் கதாநாயகிகள் பலரும் டாக்டர், இன்ஜினியரிங் அல்லது ஏதாவது டிகிரி படிப்புடன் உள்ளார்கள். நானும், நடிகையாகும் ஆரம்ப காலத்தில் படிப்பு இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியுமா என எண்ணினேன். ஆனால், படிப்பு முக்கியமில்லை. திறமை தான் முக்கியம். பத்தாம் வகுப்பு பெயில், நான் இன்றும் முன்னனி நடிகையாக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
கத்ரீனா கைப் சினிமாவில் ரூ.25 கோடி வரை சம்பளமாக பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.