‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

நடிகை கத்ரீனா கைப் பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருகிறார் . இவர் தெலுங்கில் வெங்கடேஷ் டகுபதி உடன் 'மல்லிஸ்வரி' என்கிற படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது பாலிவுட்டில் உள்ள பெரும்பாலான முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார்.
இப்போது சமீபத்தில் கத்ரீனா கைப் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "தற்போது சினிமாவில் கதாநாயகிகள் பலரும் டாக்டர், இன்ஜினியரிங் அல்லது ஏதாவது டிகிரி படிப்புடன் உள்ளார்கள். நானும், நடிகையாகும் ஆரம்ப காலத்தில் படிப்பு இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியுமா என எண்ணினேன். ஆனால், படிப்பு முக்கியமில்லை. திறமை தான் முக்கியம். பத்தாம் வகுப்பு பெயில், நான் இன்றும் முன்னனி நடிகையாக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
கத்ரீனா கைப் சினிமாவில் ரூ.25 கோடி வரை சம்பளமாக பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.