தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் |
கேரளா அரசால் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி, மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. அதன்பிறகு பல நடிகைகள், மலையாள நடிகர்கள் மீது துணிச்சலுடன் பாலியல் புகார் அளித்தனர். அதில் முக்கிமானவர் கவர்ச்சி நடிகை மினு முனீர். இவர் முன்னணி நடிகர்களான ஜெயசூர்யா, இடைவேள பாபு, மணியன் பிள்ளை ராஜு மற்றும் முகேஷ் ஆகியோர் மீது பாலியல் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தான் கொடுத்த அத்தனை பாலியல் புகார்களையும் வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளார் மினு முனீர். இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிகர்கள் மீது நான் கொடுத்த புகார் தொடர்பாக கேரள அரசு முறையாக விசாரணை நடத்தவில்லை. விசாரணைக்கு அரசு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. இதனால் நான் அளித்த பாலியல் புகார்களை வாபஸ் பெறுகிறேன். என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த புகார் வாபஸை போலீசார் ஏற்கவில்லை. வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது அங்கு முறைப்படி எழுத்துபூர்வமாகத்தான் புகாரை வாபஸ் பெற முடியும். வாபஸ் வாங்குவதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகை மினு முனீர் சினிமா வாய்ப்பு கேட்டு வந்த தன்னுடைய உறவினரின் 14 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது... தான் புகார் அளித்த நடிகர்களின் திட்டமிட்ட சதி என்று கருதும் மினு முனீர், இனி அவர்களை எதிர்த்து போராட முடியாது என்பதாலேயே வாபஸ் முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.