ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
நடிகை ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்று அதன் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்து தற்போது அங்கேயும் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரன்பீர் கபீருடன் அவர் இணைந்து நடித்த அனிமல் என்கிற திரைப்படம் வெளியாகி ஆயிரம் கோடி வசூலை நெருங்கி கொண்டிருக்கிறது. பட வெளியீட்டுக்கு முன் படம் வெளியாகும் சந்தோஷத்தில் இருந்த ராஷ்மிகாவுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் அவரைப்போன்றே மார்பிங் செய்து உருவாக்கப்பட்ட ஒரு ஆபாச வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு திரையில் இருந்து அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் கண்டனங்கள் தெரிவித்து ராஷ்மிகாவுக்கும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில் இந்த வீடியோ வெளியானதன் பின்னணியில் செயல்பட்ட நான்கு பேரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். அதே சமயம் இவர்களது பின்னணியில் மாஸ்டர் மைண்ட் ஆக இருந்து செயல்பட்ட நபர்களையும் கண்டுபிடிக்கும் விதமாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் போலீசார்.