ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
பாலிவுட் முன்னணி நடிகரான ஆமிர்கான் நடிப்பில் கடந்த வருடம் லால் சிங் சத்தா என்கிற திரைப்படம் வெளியானது. கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகர் நாகசைதன்யா முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தை அத்வைத் சந்தன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தை ஆமிர்கானே தயாரித்திருந்தார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தோல்வி படமாக அமைந்தது.
படம் வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் காஸ்டிங் இயக்குனராக பணியாற்றிய முகேஷ் சப்ரா என்பவர் இந்த படம் தோல்வி அடைந்த பின்னரும் அடுத்த சில நாட்களில் ஆமிர்கான் படக்குழுவினர் அனைவரையும் அழைத்து பார்ட்டி வைத்தார் என்கிற புதிய தகவலை தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, 'இந்த படத்தை ஆமிர்கான் ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் எதிர்பாராத தோல்வியை தழுவியது. இருந்தாலும் படக்குழுவினர் அனைவரையும் அழைத்து ஒரு பார்ட்டி கொடுக்க விரும்பினார் ஆமிர்கான். அனைவரும் ஆச்சரியத்துடன் அதில் கலந்து கொண்டோம். அதில் அவர் பேசும்போது உங்கள் பணி மகத்தானது என்று பாராட்டினார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று அனைவரிடமும் வருத்தமும் தெரிவித்தார். இந்த பார்ட்டி விபரம் வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளார்.