லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்ந்து தீவிரமாக நடைந்து வருகிறது. இந்த சமயத்தில் இஸ்ரேலில் சிக்கிய பாலிவுட் நடிகை நுஷ்ரத் பரூச்சா சமீபத்தில் பத்திரமாக இந்தியா திரும்பினார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹிந்தியில் வெளியான அகெல்லி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் கதாநாயகனாக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஷாய் ஹலேவி என்பவர் நடித்திருந்தார்.
இதற்கு முன்பு இஸ்ரேல் மற்றும் பிரெஞ்ச் படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் முதன்முதலாக அகெல்லி திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவிலும் அடி எடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் தனது நாட்டு ராணுவத்தில் இணைந்து ஹமாஸ் போரில் ஈடுபட்டு வருகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அகெல்லி படத்தின் தயாரிப்பாளர் நினத் வைத்யா உறுதிப்படுத்தியுள்ளார்..
இதுகுறித்து அவர் கூறும்போது, “இஸ்ரேலில் தற்போது போர் நிலவரம் தீவிரமாக இருப்பதால் ஷாய் ஹலேவியின் பாதுகாப்பு குறித்து விசாரிக்கும் விதமாக அவரை தொடர்பு கொண்டபோது தனது நாட்டிற்காக ராணுவத்தில் இணைந்து போரில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்” என்று கூறியுள்ளார் ஒரு நடிகர் ராணுவ வீரராக மாறி போரில் பங்கெடுத்து வருவது ஆச்சரியமான விஷயமாக பேசப்பட்டு வருகிறது