'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்களும், நூற்றுக்கணக்கான ராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாலிவுட் நடிகை நஸ்ரத் பரூச்சா இஸ்ரேலில் சிக்கியுள்ளார் என தகவல் வெளியானது. என்னை சுற்றி போர் நடக்கிறது. நான் பத்திரமாக இருக்கிறேன் என்று அவரும் தகவல் அனுப்பினார். நஸ்ரத் பரூச்சாவை பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை அவரது உறவினர்களும், நண்பர்களும் மேற்கொண்டு மத்திய அரசின் உதவியையும் நாடினர்.
இந்நிலையில், நஸ்ரத் பரூச்சா மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார் என்றும், இஸ்ரேல் பகுதியில் இருந்து வெளியேற அங்குள்ள விமான நிலையத்தை நஸ்ரத் பரூச்சா அடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் அவர் மும்பை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தூதரகத்தின் உதவியுடன் நஸ்ரத் பரூச்சா அவரது வீட்டுக்குப் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார் என்றும் கூறப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தங்கி இருக்கும் இடத்தைப் பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. இந்நிலையில், நேற்று அவர் பத்திரமாக நாடு திரும்பினார். மும்பை விமான நிலையத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.