மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாரூக்கான் நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் 'சாட்' செய்தார். அப்போது பல்வேறு விதமான கேள்விகளை ரசிகர்கள் அவரிடம் கேட்டனர். ஒரு ரசிகர், 'விஜய்யைப் பற்றிச் சொல்லுங்கள்,” என்று கேட்டதற்கு “அவர் மிகவும் இனிமையானவர், அமைதியானவர். எனக்கு அன்பான டின்னரையும் அளித்தார்,” என்று புகழ்ந்து பதிலளித்துள்ளார்.
இதற்கு முன்பு கடந்த நவம்பர் மாதம் ரசிகர்களுடன் 'சாட்' செய்த போதும் விஜய் பற்றிய ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, “விஜய் மிகவும் கூல் ஆன மனிதர்” என்று பாராட்டியிருந்தார்.
விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் தற்போது நடித்து வரும் 'ஜவான்' படத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.