‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாரூக்கான் நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் 'சாட்' செய்தார். அப்போது பல்வேறு விதமான கேள்விகளை ரசிகர்கள் அவரிடம் கேட்டனர். ஒரு ரசிகர், 'விஜய்யைப் பற்றிச் சொல்லுங்கள்,” என்று கேட்டதற்கு “அவர் மிகவும் இனிமையானவர், அமைதியானவர். எனக்கு அன்பான டின்னரையும் அளித்தார்,” என்று புகழ்ந்து பதிலளித்துள்ளார்.
இதற்கு முன்பு கடந்த நவம்பர் மாதம் ரசிகர்களுடன் 'சாட்' செய்த போதும் விஜய் பற்றிய ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, “விஜய் மிகவும் கூல் ஆன மனிதர்” என்று பாராட்டியிருந்தார்.
விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் தற்போது நடித்து வரும் 'ஜவான்' படத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.