குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் |
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கும் பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ராவும் காதலித்து வருகிறார்கள். இருவரும் தங்களது திருமணம் பற்றி கரண் ஜோஹர் நடத்தும் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார்கள்.
அவர்களது திருமணம் வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறலாம் என முன்னர் தகவல் வெளியானது. ஆனால், கியாரா தற்போது படப்பிடிப்புகளில் பிஸியாக நடித்து வருவதால் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திருமணத்தை நடத்த காதல் ஜோடி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகைகள் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்து வருகிறார்கள். இந்த வருடம் ஆலியா பட், ரன்பீர் கபூர் ஜோடி திருமணம் செய்து குழந்தையும் பெற்றுவிட்டார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் கியாரா அத்வானி நடித்து வரும் 'ஆர்சி 15' படத்திற்கான பாடல் காட்சி ஒன்று நியூசிலாந்தில் படமாகி வந்தது. நேற்றுதான் அப்பாடல் காட்சிக்கான படப்பிடிப்பை முடித்துள்ளார்கள்.