ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கும் பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ராவும் காதலித்து வருகிறார்கள். இருவரும் தங்களது திருமணம் பற்றி கரண் ஜோஹர் நடத்தும் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார்கள்.

அவர்களது திருமணம் வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறலாம் என முன்னர் தகவல் வெளியானது. ஆனால், கியாரா தற்போது படப்பிடிப்புகளில் பிஸியாக நடித்து வருவதால் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திருமணத்தை நடத்த காதல் ஜோடி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகைகள் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்து வருகிறார்கள். இந்த வருடம் ஆலியா பட், ரன்பீர் கபூர் ஜோடி திருமணம் செய்து குழந்தையும் பெற்றுவிட்டார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் கியாரா அத்வானி நடித்து வரும் 'ஆர்சி 15' படத்திற்கான பாடல் காட்சி ஒன்று நியூசிலாந்தில் படமாகி வந்தது. நேற்றுதான் அப்பாடல் காட்சிக்கான படப்பிடிப்பை முடித்துள்ளார்கள்.




