‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஷாரூக்கான். நாயகனாக மட்டுமல்லாது பல்வேறு பிசினஸ்களில் முதலீடு செய்துள்ளார். சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம், கோல்கட்டா ஐபிஎல் அணியின் உரிமையாளர் உள்ளிட்ட பல பிசினஸ்களை செய்து வருகிறார்.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஷாரூக்கிற்கு சொந்தமான 'மன்னாத்' என்ற பெயர் கொண்ட பெரிய பங்களா ஒன்று உள்ளது. அங்குதான் ஷாரூக் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அந்த வீட்டின் முன்பு ரசிகர்கள் அடிக்கடி ரசிகர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொள்வார்கள். தற்போது அந்த வீட்டின் முகப்பில் உள்ள பெயர்ப் பலகைகள் மாற்றப்பட்டு புதிய வடிவில் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை ரசிகர்கள் 'டைமண்ட்' பெயர்ப் பலகை என அழைத்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக பழைய பெயர் பலகையை நீக்கிவிட்டிருந்தார்கள். அது குறித்து ரசிகர்கள் பல்வேறு விதமான தகவல்களை வெளியிட்டு வந்தார்கள். இந்நிலையில் தற்போது புத்தம் புதுப் பொலிவுடன் அந்தப் பெயர் பலகைகள் வீட்டு கேட்டின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஷாரூக் உண்மையிலேயே வைரங்களைப் பதித்துள்ளாரா அல்லது வைரங்களைப் போல் மின்னும் கற்களைப் பதித்துள்ளாரா என அவரது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.