ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சில ஆண்டுகளுக்கு முன்பு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும், தற்கொலை எண்ணம் கூட வந்ததாக அவேரே முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும் தனது தாயாரின் பராமரிப்பு காரணமாகவே தான் அதிலிருந்து மீண்டு வந்ததாக தெரிவித்திருக்கிறார். அந்த சம்பவத்திற்கு பிறகு மன அழுத்தத்தால் மனநல பாதிப்பால் எவரும் தற்கொலை முயற்சி ஈடுபடக்கூடாது என்று அதை தடுக்கும் முயற்சியாக லைவ் லவ் லாப் என்று அமைப்பினை பெங்களூர் மற்றும் ஒடிசாவில் தொடங்கினார் தீபிகா படுகோனே.
தற்போது தமிழ்நாட்டில் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள ஈக்காட்டில் செயல்பட்டு வரும் வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கத்துடன் தனது லைவ் லவ் லாப் அமைப்பையும் இணைத்து செயல்பட்டு வருகிறார் தீபிகா படுகோனே. இதற்காக திருவள்ளூர் மாவட்டம் ஈகாட்டிற்கு சென்ற தீபிகா படுகோனே அங்கு மனநலம் பாதித்தவர்களை பராமரிக்கும் அமைப்புகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தனது சார்பில் உதவிகள் செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்.
இதையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில், மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையையும் அவர்களை பராமரிப்புகளின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இதில் அவர்களை பராமரிப்பவர்களின் பங்கு மிக முக்கியமானது. அதனால் தான் என்னுடைய அம்மா இங்கே இருக்கிறார் எனது சகோதரியும் மிக ஆர்வமாக இதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பராமரிப்புகளின் கதைகளை கேட்கும் போது அது எவ்வளவு முக்கியமானது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இன்னும் பெரிய அளவில் உதவி செய்ய திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார் தீபிகா படுகோனே.