சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.66 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சில ஆண்டுகளுக்கு முன்பு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும், தற்கொலை எண்ணம் கூட வந்ததாக அவேரே முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும் தனது தாயாரின் பராமரிப்பு காரணமாகவே தான் அதிலிருந்து மீண்டு வந்ததாக தெரிவித்திருக்கிறார். அந்த சம்பவத்திற்கு பிறகு மன அழுத்தத்தால் மனநல பாதிப்பால் எவரும் தற்கொலை முயற்சி ஈடுபடக்கூடாது என்று அதை தடுக்கும் முயற்சியாக லைவ் லவ் லாப் என்று அமைப்பினை பெங்களூர் மற்றும் ஒடிசாவில் தொடங்கினார் தீபிகா படுகோனே.
தற்போது தமிழ்நாட்டில் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள ஈக்காட்டில் செயல்பட்டு வரும் வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கத்துடன் தனது லைவ் லவ் லாப் அமைப்பையும் இணைத்து செயல்பட்டு வருகிறார் தீபிகா படுகோனே. இதற்காக திருவள்ளூர் மாவட்டம் ஈகாட்டிற்கு சென்ற தீபிகா படுகோனே அங்கு மனநலம் பாதித்தவர்களை பராமரிக்கும் அமைப்புகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தனது சார்பில் உதவிகள் செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்.
இதையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில், மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையையும் அவர்களை பராமரிப்புகளின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இதில் அவர்களை பராமரிப்பவர்களின் பங்கு மிக முக்கியமானது. அதனால் தான் என்னுடைய அம்மா இங்கே இருக்கிறார் எனது சகோதரியும் மிக ஆர்வமாக இதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பராமரிப்புகளின் கதைகளை கேட்கும் போது அது எவ்வளவு முக்கியமானது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இன்னும் பெரிய அளவில் உதவி செய்ய திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார் தீபிகா படுகோனே.