'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

தெலுங்கில் வெளியாகி பாலிவுட்டுக்கு செல்லும் படமாகட்டும், பாலிவுட்டில் வெளியாகி தென்னிந்தியாவில் வெளியாகும் படமாகட்டும், இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியை சிறப்பு விருந்தினராக அழைப்பது என்பதை ஒரு வழக்கமாகவே ஆக்கிவிட்டார்கள். அவரும் மற்றவர்களின் மனம் கோணாமல் அவர்களது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கிறது.
விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தை புரமோட் பண்ணுவதற்காக சென்னைக்கு வந்த ரன்பீர் கபூர் நாகார்ஜுனா ஆகியோருடன் இயக்குனர் ராஜமவுலியும் கலந்து கொண்டார். அதுமட்டுமல்ல சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இந்த மூவருக்கும் தலைவாழை இலையில் தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. வடநாட்டை சேர்ந்த ரன்பீர் கபூர் நம் உணவு வகைகளை ரொம்பவே ரசித்து சாப்பிட்டாராம்.