லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

தெலுங்கில் வெளியாகி பாலிவுட்டுக்கு செல்லும் படமாகட்டும், பாலிவுட்டில் வெளியாகி தென்னிந்தியாவில் வெளியாகும் படமாகட்டும், இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியை சிறப்பு விருந்தினராக அழைப்பது என்பதை ஒரு வழக்கமாகவே ஆக்கிவிட்டார்கள். அவரும் மற்றவர்களின் மனம் கோணாமல் அவர்களது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கிறது.
விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தை புரமோட் பண்ணுவதற்காக சென்னைக்கு வந்த ரன்பீர் கபூர் நாகார்ஜுனா ஆகியோருடன் இயக்குனர் ராஜமவுலியும் கலந்து கொண்டார். அதுமட்டுமல்ல சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இந்த மூவருக்கும் தலைவாழை இலையில் தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. வடநாட்டை சேர்ந்த ரன்பீர் கபூர் நம் உணவு வகைகளை ரொம்பவே ரசித்து சாப்பிட்டாராம்.




