ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
தமிழில் கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், விஷாலுடன் ஆக்ஷன் உட்பட சில படங்களில் நடித்துள்ளவர் ஆகன்ஷா புரி. இந்தி சின்னத்திரை நடிகையான இவர் 'விநாயகர்' என்ற தமிழ் தொடரில், பார்வதி தேவியாக நடித்திருந்தார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.
தமிழில் ஆர்யா சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தியது போன்று பிரபல இந்தி பாடகர் மிகா சிங் மணமகளைத் தேர்வு செய்யும் சுயம்வரம் நிகழ்ச்சி ஒன்றை தனியார் சேனலில் நடத்தினார். இதில் 12 இளம் பெண்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஆகன்ஷா புரியை மணமகளாக தேர்வு செய்தார் மிகா சிங்.
சுயம்வர நிகழ்ச்சியிலேயே மாலை மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். பாடகர் மிகா சிங், பிரபல பாடகர் தாலர் மெகந்தியின் சகோதரர். மிகா சிங்கும், ஆகன்ஷா பூரியும் காதலித்து வருவதாக ஏற்கெனவே தகல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.