ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், விஷாலுடன் ஆக்ஷன் உட்பட சில படங்களில் நடித்துள்ளவர் ஆகன்ஷா புரி. இந்தி சின்னத்திரை நடிகையான இவர் 'விநாயகர்' என்ற தமிழ் தொடரில், பார்வதி தேவியாக நடித்திருந்தார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.
தமிழில் ஆர்யா சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தியது போன்று பிரபல இந்தி பாடகர் மிகா சிங் மணமகளைத் தேர்வு செய்யும் சுயம்வரம் நிகழ்ச்சி ஒன்றை தனியார் சேனலில் நடத்தினார். இதில் 12 இளம் பெண்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஆகன்ஷா புரியை மணமகளாக தேர்வு செய்தார் மிகா சிங்.
சுயம்வர நிகழ்ச்சியிலேயே மாலை மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். பாடகர் மிகா சிங், பிரபல பாடகர் தாலர் மெகந்தியின் சகோதரர். மிகா சிங்கும், ஆகன்ஷா பூரியும் காதலித்து வருவதாக ஏற்கெனவே தகல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.