பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
பாலிவுட் கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் சர்ச்சை நாயகி. அடிக்கடி எதையாவது செய்தோ, பேசியோ பரபரப்பு கிளப்புவார். கடைசியாக தனது காதல் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறினார். அதன்பிறகு சில காலம் அமைதியாக இருந்தவர். இப்போது மீண்டும் அடுத்த சர்ச்சையை தொடங்கி விட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பழங்குடியின பெண்களை போல ஆடை அணிந்து அவர்களை கிண்டல் செய்வது போல பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில கேந்த்ரிய சர்னா சமிதி என்ற அமைப்பின் தலைவர் ட்ரிக்கி பழங்குடியின மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக ராக்கி சாவந்த் மீது ராஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ட்ரிக்கி கூறியிருப்பதாவது: நடிகை ராக்கி சாவந்த், அரை நிர்வாண ஆடை அணிந்தபடி, பழங்குடியினப் பெண்களை இழிவுப்படுத்தியுள்ளார். ஆபாசமான கருத்துகளையும் தெரிவித்துள்ளார். இதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லை என்றால் அவருக்கு எதிரான போராட்டம் தொடரும். என்கிறார்.