ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராம்கோபால் வர்மா தற்போது தகனம் என்ற வெப் சீரிசை தயாரித்து உள்ளார். இதில் இஷா கோபிகர் நடித்துள்ளார். அவருடன் நைனா கங்குலி, அபிஷேக் துஹான், அபிலாஷ் சவுத்ரி, சாயாஜி ஷிண்டே, அஷ்வத்காந்த் சர்மா, பார்வதி அருண் மற்றும் பிரதீப் ராவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதில் இஷா கோபிகர், அஞ்சனா சின்ஹா என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நைனா கங்குலி நக்சலைட்டாக நடித்துள்ளார். அபிஷேக் துஹான், ஹரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிலாஷ் சவுத்ரி, நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். சாயாஜி ஷிண்டே, சென்னா ரெட்டியாக நடித்துள்ளார்.
தொடர் குறித்து ராம்கோபால் வர்மா கூறியிருப்பதாவது: இது நான் இயக்கும் முதல் ஓடிடி தொடர். மகாத்மா காந்தி சொன்ன 'கண்ணுக்குக் கண் உலகையே குருடாக்குவதில்தான் வெற்றியடையும்', மகாபாரதத்தில் மேற்கோள் காட்டப்பட்ட 'பழிவாங்குதல் என்பது தூய்மையான உணர்ச்சி' என்ற இரு முரண்பாடான மேற்கோள்களுக்கு இடையில் உணர்வுப்பூர்வமான சம்பவங்களுடன் உருவாகியுள்ளது தான் இந்த கதை. இது வெறும் பழிவாங்கும் கதையல்ல, பழிவாங்கும் உணர்வின் கதையைச் சொல்கிறது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் அல்ல, ஆனால் இது உறைய வைக்கும், உணர்வுப்பூர்வமாக சிலிர்க்க வைக்கும், குற்றங்களைப் பற்றியது. என்கிறார் வர்மா.