ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

ராம்கோபால் வர்மா தற்போது தகனம் என்ற வெப் சீரிசை தயாரித்து உள்ளார். இதில் இஷா கோபிகர் நடித்துள்ளார். அவருடன் நைனா கங்குலி, அபிஷேக் துஹான், அபிலாஷ் சவுத்ரி, சாயாஜி ஷிண்டே, அஷ்வத்காந்த் சர்மா, பார்வதி அருண் மற்றும் பிரதீப் ராவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதில் இஷா கோபிகர், அஞ்சனா சின்ஹா என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நைனா கங்குலி நக்சலைட்டாக நடித்துள்ளார். அபிஷேக் துஹான், ஹரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிலாஷ் சவுத்ரி, நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். சாயாஜி ஷிண்டே, சென்னா ரெட்டியாக நடித்துள்ளார்.
தொடர் குறித்து ராம்கோபால் வர்மா கூறியிருப்பதாவது: இது நான் இயக்கும் முதல் ஓடிடி தொடர். மகாத்மா காந்தி சொன்ன 'கண்ணுக்குக் கண் உலகையே குருடாக்குவதில்தான் வெற்றியடையும்', மகாபாரதத்தில் மேற்கோள் காட்டப்பட்ட 'பழிவாங்குதல் என்பது தூய்மையான உணர்ச்சி' என்ற இரு முரண்பாடான மேற்கோள்களுக்கு இடையில் உணர்வுப்பூர்வமான சம்பவங்களுடன் உருவாகியுள்ளது தான் இந்த கதை. இது வெறும் பழிவாங்கும் கதையல்ல, பழிவாங்கும் உணர்வின் கதையைச் சொல்கிறது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் அல்ல, ஆனால் இது உறைய வைக்கும், உணர்வுப்பூர்வமாக சிலிர்க்க வைக்கும், குற்றங்களைப் பற்றியது. என்கிறார் வர்மா.