மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் |
பிரபல நடிகை சோனம் கபூர் வீட்டில் கடந்த பிப்ரவரி 11ம் தேதி ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது. சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பின்னர், கடந்த பிப்ரவரி 23ம் தேதி அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளார் சோனம் கபூர் .
இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் சோனம் கபூரின் வீட்டில் நர்சாக பணிபுரியும் அபர்னா ருது வில்சன் ( வயது 31) என்ற பெண் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சோனம் கபூரின் மாமியாரின் உடல்நிலையை கவனிப்பதற்காக நர்சஸ் அபர்னா பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர், சோனம் கபூரின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பணம், நகையை கொள்ளையடித்துள்ளார். இந்த கொள்ளை சம்பவத்திற்கு நர்சின் கணவர் நரேஷ் குமார் சாஹர் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து, நடிகை சோனம் கபூர் வீட்டில் கொள்ளையடித்த நர்ஸ், கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நர்சிடம் இருந்து கொள்ளையடித்த நகை, பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.