ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
5 முறை தேசிய விருது பெற்ற நடிகை ஷபானா ஆஸ்மி. 1974 முதல் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்: கோவிட் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனது நெருங்கி நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் பரிசோனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த பதிவுடன் அவர் தனது கணவர் ஜாவீத் அக்தருடன் இருக்கும் படத்தை வெளியிட்டிருந்தார் இதனை குறிப்பிட்டுள்ள தயாரிப்பாளர் போனி கபூர் "எனது நண்பர் ஜாவீத்திடமிருந்து விலகி இருங்கள்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் ஷபானா ஆஸ்மி குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஷபானா ஆஸ்மி தற்போது ஆலியா பட் மற்றும் ரன்வீர் சிங்குடன் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் நடித்து வருகிறார்.