இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'தவமாய் தவமிருந்து' தொடரில் கணவன் மனைவியாக நடித்து வரும் சந்தியா ராமசந்திரன் - ப்ரிட்டோ மனோவிற்கு அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. சீரியலில் மலர்-பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இருவரது கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும். இந்த கெமிஸ்ட்ரி நிஜத்திலும் மலர்ந்து இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில் கடந்த ஜனவரி 25ம் தேதி சந்தியா - பிரிட்டோவின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை புகைப்படங்களுடன் இருவரும் பகிர்ந்துள்ளனர். சர்ப்ரைஸில் மூழ்கிய ரசிகர்கள் சந்தியா மற்றும் பிரிட்டோவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.




