ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

நாகசைதன்யா, சாய்பல்லவி நடித்த லவ் ஸ்டோரி படம் பெரிய வரவேற்பையும், வசூலையும் குவித்து வருகிறது. சாய்பல்லவி தெலுங்கு மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இதில் அவர் அடிப்படையில் ஒரு டாக்டர் என்பதால் நீட் தேர்வு குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
மருத்துவம் படித்தவள் என்பதால் என்னால் நீட் தேர்வு எழுதுகிறவர்களின் நிலையை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. மருத்துவ படிப்பு கடல் மாதிரி பெரியது. எங்கிருந்து என்ன கேள்வி கேட்பார்கள் என்றே தெரியாது. அதனால் மனம் அழுத்தமாக இருக்கக்கூடும்.
என் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் மதிப்பெண் குறைந்துவிட்டது என்று தற்கொலை செய்து கொண்டார். இத்தனைக்கும் அவர் குறைவான மதிப்பெண்கள் எடுக்கவில்லை. ஆனால் அவர் எதிர்பார்த்த மதிப்பெண்கள் அது இல்லை. என்பதால் தற்கொலை முடிவை எடுத்து விட்டார்.
தயவு செய்து தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று நான் சொல்வது எளிது. நன்றாக எழுதுவோம் என்று நினைத்து, ஆனால் நன்றாக எழுதவில்லை என்றால் நம்பிக்கையை இழப்பார்கள். ஆனால் இது முடிவு இல்லை. தோற்பது தெரிந்தால் மற்றவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். மாற்று வழி பற்றி யோசிக்க வேண்டும். எந்த விதத்திலும் தற்கொலை தீர்வாகாது.
18 வயது மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டது மன வேதனையாக இருக்கிறது. தோற்றவர்கள் வலியும், குழப்பமும் எனக்கு புரிகிறது. அவர்களுக்கு யாராவது உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். என்றார்.




