‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி | 'தாய்கிழவி' 22 கோடி.. 'வித் லவ்' 35 கோடி | பிளாஷ்பேக் : பாலுமகேந்திராவின் நிறைவேறாத சிவாஜி கனவு | பிளாஷ்பேக் : பாட வந்தவர் நடிகை ஆனார் | அமரனில் மிஸ் ஆச்சு... சேயோனில் அது நடக்குமா? | இயக்குனர் விஜய் என் வழிகாட்டி : ஜியா சங்கர் நெகிழ்ச்சி | நடிகை ஸ்ருதிகாவுக்கு வைரஸ் காய்ச்சல் | மறைந்த இயக்குனர் குடும்பத்துக்கு நிதி உதவி: மேடையிலே செக் கொடுத்தார் யோகி பாபு | 'தாய்கிழவி'க்கு முன்னுரிமை ; என் படத்திற்கு தியேட்டர் தர மறுக்கிறார்கள்: ஆரி புகார் |

சென்னையை சேர்ந்த இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர் கடந்த 2000 ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியையோ, லாபமோ தரவில்லை என்றும் நிகழ்ச்சி நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதால் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக ஏ.ஆர்.ரஹ்மான் தர வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார். இசை நிகழ்ச்சியின் காப்புரிமையை தனியார் இசை நிறுவனங்களுக்கு விற்று ஏ.ஆர்.ரஹ்மான் லாபம் அடைந்ததாகவும மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியம் முன்பு நடைபெற்று வந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதா சம்பத் நிகழ்ச்சி நஷ்டம் ஏற்பட்டதற்கும், தங்களுக்குகும் சம்பந்தம் இல்லை என்றும், நிகழ்ச்சிக்காகப் பேசிய தொகையைக் கூட மனுதாரர் தரவில்லை என்றும் போலியாக இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது. எனவே மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உமாசங்கர், இந்த பிரச்சினை முடிந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பிரச்சினை முடிந்துவிட்டதா என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வழக்கறிஞரிடம் உத்தரவிட்டிருந்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் எந்த சமரசமும் ஏற்படவில்லை என்றும் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் வாதிட்டார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் உமாசங்கரும், தனக்கு மனுதராரரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான நஷ்ட ஈடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.




