ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

2003ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை மந்திரா பேடி. சினிமா, டிவி தொடர்களிலும் நடித்துள்ளவர்.
தமிழில் சிம்பு நடித்த “மன்மதன் படத்திலும், சாஹோ படத்திலும் நடித்துள்ளார். தற்போது அடங்காதே படத்தில் நடித்து வருகிறார். ராஜ் கௌஷல் என்பவரை 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் மந்திரா. அவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த வருடம் தான் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார்கள்.
இந்நிலையில் இன்று(ஜூன் 30) அதிகாலை ராஜ் கௌஷல் மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் இருவரும் தங்களது நண்பர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்கள். அன்று தான் தன் மனைவி, குழந்தைகளுடன் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். அடுத்த சில தினங்களுக்குள் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ் கௌஷல் திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். “அந்தோணி கோன் ஹை, ஷாதி கா லாடூ, பியார் மெயின் கபி கபி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கணவரின் உடலை அவரே சுமந்து சென்றதோடு, இறுதிச்சடங்கின் போது வைக்கப்படும் கொள்ளி என சொல்லப்படும் அந்த சட்டியை கையில் ஏந்தி கண் கலங்கியபடி சென்ற போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர் நெஞ்சையும் உருக்கியது.




