பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே? | 'கருப்பு' வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர் | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள் | மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்! | விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன் | 40 வருடங்களை நிறைவு செய்யும் 'விக்ரம்' | 400 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ஜெயிலர் - காவாலய்யா' | ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்? | ஹிரித்திக் ரோஷனிடம் வந்து நிற்கும் ஜெயிலர் 2 |

தற்போது ஜூனியர் என்டிஆர்-ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது கொரோனா தொற்று பரவி வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி வெளியிட இருந்த ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ராஜ மவுலி இயக்கும் படத்தில் மகேஷ்பாபு நடிப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான கதை எழுதும் பணியை ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தொடங்கி விட்டாராம். தற்போது சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில் நடித்து வரும் மகேஷ்பாபு, இதையடுத்து திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை முடித்ததும் ராஜமவுலியுடன் இணைகிறார். இந்த படம் தான் ராஜமவுலியும், மகேஷ்பாபுவும் இணையும் முதல் படமாகும்.




