ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பிரபல தமிழ்பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர். சூர்யா நடித்த கஜினி, விஜயகாந்த் நடித்த சபரி, பரத் நடித்த பிப்ரவரி 14, கில்லாடி ஆகிய படங்களை தயாரித்தார். கஜினி படம் தவிர மற்ற படங்கள் அவருக்கு நஷ்டத்தை கொடுத்ததால் சினிமா தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
59 வயதான சந்திரசேகர் சேலத்தில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.




