‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

பத்து வருடங்களுக்கு முன்பு எங்கேயும் எப்போதும் என்கிற படத்தின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ராஜாராணி, மான் கராத்தே என தொடர்ந்து வெற்றி படங்களாக தயாரித்து வந்தார். இடையில் சில காலம் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் ஓம் பிரகாஷ் பட் என்பவருடன் இணைந்து தயாரிக்க உள்ளாராம்.
இதற்கான முன் கட்ட தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை யார் இயக்குகிறார், யார் நடிக்கிறார்கள் என்கிற தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த படத்திற்கு 1947 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அனேகமாக இது சுதந்திர போராட்டத்தை மையப்படுத்திய வரலாற்று படமாகவோ அல்லது அதன் பின்னணியில் சமகாலத்தில் உருவாகும் சமூக படமாகவோ இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் உருவாக உள்ளது.




