ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
தமிழகத்தில் நேற்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. திரையுலகினர் பலரும் ஆர்வமாய் ஓட்டளித்தனர். அதேசமயம் பல திரைப்பிரபலங்கள் ஓட்டளிக்கவில்லை. படங்களில் சமூக கருத்துக்களை கூறும் நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி ஓட்டளிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது.
ஆனால் அவர் ஓட்டு போட்ட விரல் மை அடையாளத்தை டுவிட்டரில் வெளியிட்டு குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதோடு, ‛‛நானும், என் மனைவியும் ஓட்டுச்சாவடிக்கு நடந்தே சென்று 6.55 மணிக்கே சென்றுவிட்டோர். ஆனால் ஓட்டு பதிவு இயந்திரத்தில் சிறு பிரச்னை அதை சரிசெய்ய 40 நிமிடம் ஆனது. பின்பு முதல் ஆளாக ஓட்டு போட்டு வந்தோம். வழக்கம் போல் நான் என் பணிக்கு சென்றுவிட்டேன். நான் ஓட்டு போட்டதை விளம்பரபடுத்தவில்லை. நான் ஓட்டு போட்டுவிட்டேன். என் கடமையை நான் சரியாக செய்துவிட்டேன்'' என வீடியோ மூலமும் தெரிவித்துள்ளார்.