தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

கன்னட நடிகர் யாஷ் நாயகனாக நடித்த கேஜிஎப் படம் 2018 டிசம்பரில் திரைக்கு வந்தது. பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று டப் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலுமே வசூல் சாதனை புரிந்தது. அதனால் மீண்டும் யாஷ்-பிரசாந்த் நீல் கூட்டணி கேஜிஎப் சாப்டர்-2 படத்திலும் இணைந்தது. இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை கடந்த ஆண்டு ஜூலை 20ந்தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு,2021 ஜூலை 16-ந்தேதி வெளியிடப்போவதாக தற்போது அறிவித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் யாஷ் வெளியிட்ட ஒரு டுவீட்டில் ஜூலை 16-ந்தேதி உங்கள் சீட் பெல்ட்டை நன்றாக போட்டுக் கொள்ள தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஒரு டுவீட் போட, அது ரசிகர்களிடம் ஏராளமான லைக்ஸ் பெற்றது.
இந்த நிலையில், நடிகர் யாஷின் ரசிகர் ஒருவர், பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், கேஜிஎப் -2 படம் வெளியாகும் வருகிற ஜூலை 16-ந்தேதியில் இப்படத்தை காண மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதனால் அன்றைய தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு இது ஒரு படம் மட்டுமின்றி எங்களது எமோஷன். எங்களது உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என்றும் அந்த ரசிகர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
யாஷ் ரசிகரின் இந்த கடிதமும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.